சாதி அரசியல் குறித்து இயக்குனர் ரஞ்சித்தின் பதிவு:
கபாலி, காலா படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல்வாதிகள் ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சுதந்திரம் பெற்ற பின் சாதி ஏற்ற தாழ்வுகள் களையப்படும் என்ற சொன்ன எல்லா தலைவர்களும் மறைந்தே போனார்கள்.
ஆனால் இன்றும், இந்த தேர்தலிலும் சொந்த சாதி ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள மத-சாதியவாத அமைப்பினர்களும், முற்போக்கு அமைப்பினர்களும், அரசியலில் வெற்றி மட்டுமே இலக்கு என்று முனைப்பு காட்டும் இந்த நேரத்தில் “சமூக சீர்திருத்தம் அடையாமல் அரசியல் சீர்திருத்தம் அடைந்தும் பயனில்லை” என்று அன்றே ஓங்கி உரைத்த “நவீன இந்தியாவின் தந்தை” புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் பயணிக்க வேண்டிய அவசியத்தை உணரத்தொடங்குவோம்!
Leave a Reply
You must be logged in to post a comment.