சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழக பெண் எழுத்தாளர்!

தமிழ் உள்ளிட்ட 23 இந்திய மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு சாகித்ய அகாடமி விருது சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஶ்ரீ அவர்ஜய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் மனோஜ் குரூர் என்ற எழுத்தாளர் எழுதிய `நிலம் பூத்து மலர்ந்த நாள்’. என்ற நாவலை தமிழில் கே.வி.ஜெயஶ்ரீ மொழியாக்கம் செய்திருந்த நிலையில் இந்த நூலுக்கு தற்போது சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

இந்த மொழியாக்க விருதுக்குச் செம்பு பட்டயத்துடன் 50,000 ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்படும் என்பதும் இந்தவிருது விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply