பாரதியாரின் 138-வது பிறந்தநாளையொட்டி சர்வதேச பாரதி விழாவாக கொண்டாட பிரதமர் மோடி தனது சிறப்புரைய்யில் கூறியுள்ளார்.

மேலும் ஜகத்தில் உள்ளோர் எதிர்த்த போதிலும் அச்சமில்லை என்றவர் பாரதி என்றும், பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க பாரதி எண்ணினார் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்கள் என பாரதி நினைத்தார் என்றும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் முன்னேற்றம் குறித்து பேசினார் என்றும், பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணினார் பாரதி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply