சரவணபவன் ராஜகோபாலன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்!
ஜீவஜோதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது மகன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்
இந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு ஏற்றது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்
Leave a Reply
You must be logged in to post a comment.