சம்பளம் போடக்கூட பணம் இல்லை ஐ.நா சபையின் பரிதாபமான நிலை

ஐ.நா சபை ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் போடக்கூட பணம் இல்லாததால் ஐ.நா சபை தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஐநா சபை உறுப்பு நாடுகள் தரவேண்டிய பணத்தை தராததால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் தரக்கூட பணம் இல்லை என்றும் ஐநா சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்

இதனால் ஐநா சபையில் பணிபுரியும் 37 ஆயிரம் ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஐநா சபையின் பொதுச்செயலாளர் ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் ஐநா சபையில் சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவையில்லாத செலவுகளை குறைக்க வேண்டும் ஐநா சபை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply