shadow

சபரிமலை விவகாரம்: குழப்பமான கருத்தை தெரிவித்த ராகுல்காந்தி

சபரிமலை விவகாரத்தில் இருதரப்பிலும் நியாயம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குழப்பமான கருத்தை தெரிவித்துள்ளதால் இருதரப்பினர்களும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பெண்களை அனுமதிக்க மறுத்து சபரிமலையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தா நிலையில் ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறி வந்த ராகுல்காந்தி, தற்போது தமது எண்ணத்தை மாற்றி மரபும் ஐதிகமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வாதத்திலும் நியாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே சமயம் பெண்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும் என்பதிலும் மாற்று கருத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையில் இருதரப்பிலும் நியாயம் இருப்பதாகவும், மக்கள்தான் இதற்கு ஒரு நல்ல முடிவெடுக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply