shadow

சபரிமலை கோவில் தீர்ப்புக்கு இலங்கையில் கண்டனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக, கேரளா உள்பட பல பகுதிகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில் இலங்கையில் உள்ள ஐயப்ப பக்தர்கள் சார்பில் கொழும்பு கோட்டை ரயில்நிலையம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யக்கோரியும், புதிய சட்டம் இயற்ற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply