சபரிமலை கோவிலில் பரிகாரம்: உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு
சபரிமலை கோவிலில் நேற்று இரண்டு பெண்கள் தரிசனம் செய்ததால் கோவிலை மூடி பரிகார பூஜை செய்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம் செய்ததால் கோயிலை மூடி பரிகார பூஜை செய்யப்பட்ட விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்த தந்திரி மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இதனை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டத்.
ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.