shadow

சபரிமலையை போர்க்களமாக்க முயற்சி:பினராயி விஜயன்

நேற்று இரண்டு பெண்கள் கேரள போலீசார்களின் பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசனம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி இன்று அம்மாநிலத்தில் பந்த் நடத்தும் அளவுக்கு உள்ளது.

இன்றைய பந்த்தில் வன்முறை நடந்து ஒருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்து அமைப்புகள் சபரிமலையை போர்க்களமாக்க முயற்சிப்பதாக கேரள முதவர் பினரயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்றும், அதையே அரசு நிறைவேற்றியுள்ளதாகவும் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

 

Leave a Reply