சட்டப்பேரவையில் இருந்து 3 எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை சட்டப்பேரவை கூடியவுடன் பேரவையில் இருந்து தமிமுன் அன்சாரி, தனியரசு, அபுபக்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் வாடும் 7 பேர் விடுதலை தொடர்பாக பேரவையில் பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்வதாக மூவரும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தாமதிக்கப்படுவது ஏன் என்று தனியரசு கேள்வி நிலையில் கடையநல்லூர் தாலுக்கா பற்றி பேச அனுமதிக்காததால் அபுபக்கர் வெளிநடப்பு செய்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.