கோவை சிறுமியை கொன்றவனுக்கு அடிஉதை கொடுத்த பொதுமக்கள்

கோவையில் 6 வ்யது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சந்தோஷ் என்பவருக்கு பொதுமக்கள் அடி உதை கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது சந்தோஷை பொதுமக்களே அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் மிகவும் கஷ்டப்பட்டு பொதுமக்களிடம் இருந்து சந்தோஷை மீட்டு மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்றனர்.

Leave a Reply