கோவாவில் பாஜக அரசை கலைக்க வேண்டும்: ஆளுனருக்கு கடிதம்

கோவாவில் நடைபெறும் பாஜக அரசை கலைத்துவிட்டு தனிப்பெரும்பான்மையுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கோவா ஆளுநருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

கோவா மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஆனால் 13 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, கூட்டணி கட்சிகளின் ஆதரவால் கோவாவில் ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply