கோட்டையில் ரஜினிகாந்த் கொடி பறக்கும் – கராத்தே தியாகராஜன்

ஒருபக்கம் ரஜினிகாந்த், பாஜகவின் தமிழக தலைவர் ஆகப்போகிறார் என்ற வதந்தி பரவி வரும் நிலையில் இன்னொரு பக்கம் ரஜினி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போகிறார் என்ற செய்தி வெளியாகி வருகிறது

இதுகுறித்து சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் கூறியபோது, சட்டமன்ற தேர்தலுக்கு முன் நிச்சயம் கட்சி தொடங்கி விடுவேன் என்று ரஜினி கூறினார் என்றும், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின், கோட்டையில் ரஜினிகாந்தின் கொடி தான் பறக்கும் என்றும் கூறினார்.

அதேபோல் இதுகுறித்து எஸ்வி சேகர் கூறியபோது, ‘‘பாஜகவில் ரஜினி இணைவதற்கு வாய்ப்பு மிகக்குறைவு என்றும், ஆனால் பாஜக மற்றும் ரஜினியின் கொள்கைகள் ஒரே மாதிரியானவை என்றும் தெரிவித்தார். மேலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்பது உறுதி என்றும் தெரிவித்தார்.

Leave a Reply