கோடிகளை கொட்டி வீடு வாங்கி என்ன பயன்? தண்ணீர் பிரச்சனையால் காலியாகும் சென்னை!

SONY DSC

சென்னைக்கு சென்றால் வேலை கிடைத்துவிடும், வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என தமிழகத்தின் பெரும்பாலான பகுதியில் இருந்து சென்னைக்கு வந்த பொதுமக்கள் ஓரளவுக்கு செட்டில் ஆகி சொந்த வீடுகளையும் வாங்கியுள்ளனர்.

ஆனால் இந்த சென்னையின் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் வாங்கிய வீடுகள் ஒன்று வெள்ளத்தின் போது மூழ்கிவிடும் வகையில் கோடையிலும் தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் நிலையிலும் உள்ளது. குறிப்பாக தற்போது சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இல்லை என்பதால் லட்சங்களையும் கோடிகளையும் கொட்டி சொந்த வீடு வாங்கியவர்களின் நிலை அதோ கதிதான்

வாடகை வீடு என்றாலும் உடனே தண்ணீர் உள்ள வேறு வீட்டிற்கு மாறிவிடலாம்,. சொந்த வீடு வாங்கியவர்கள் உடனடியாக விற்கவும் முடியாமல், வாழவும் முடியாமல் தவித்து வருகின்றனர். இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் நீடித்தால் சென்னையை விட்டு பொதுமக்கள் காலி செய்து மீண்டும் சொந்த ஊருக்கே சென்று பிழைக்க நேரிடும் நிலை ஏற்படும்

Leave a Reply