கோடநாடு விவகாரம்: கைதான சயான், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர்
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை வீடியோ ஒன்றில் கூறிய சயான், மனோஜ் ஆகியோர் சமீபத்தில் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். சயான், மனோஜ் இருவரும் தனிப்படை போலீசார்களால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை அவர்கள் ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் கைதான சயான், மனோஜ் ஆகிய இருவரும் சற்றுமுன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவரையும் நீதிபதி முன் ஆஜர் செய்தபோது அவர்களை சி’றையில் அடைக்க நீதிபதி மறுத்துவிட்டதோடு, இருவரும் ஜனவரி 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கடஹு
Leave a Reply
You must be logged in to post a comment.