shadow

கொல்கத்தா பெண்ணுக்கு பிறந்த தேவதை: பரபரப்பான புகைப்படங்கள்

கதைகளில் தேவதை குறித்து நாம் சிறுவயதில் படித்துள்ளோம். தேவதைகளுக்கு கால் இருக்காது, இடுப்புக்கு கீழே பறக்கும் வகையில் இறக்கை போன்று இருக்கும் படங்களையும் பார்த்துள்ளோம்

இந்த நிலையில் கொல்கத்தாவில் நேற்று பிறந்த ஒரு குழந்தை அசல் தேவதை போலவே கால்கள் இரண்டு ஒட்டிப்போய் பிறந்துள்ளது. இந்த குழந்தை பாலின உறுப்பு இன்றி பிறந்துள்ளதால் ஆண் குழந்தையா, அல்லது பெண் குழந்தையா என்று தெரியாமல் உள்ளது.

23வயது பெண் மஸ்குரா பீபி என்ற பெண்ணுக்கு பிறந்த இந்த குழந்தையை பெற்றோர் தேவதை என்றே அழைத்து வருகின்றனர். இதுபோன்ற குழந்தை ஒரு லட்சத்தில் ஒருவருக்கே பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தேவதை என்று பெற்றோர் அழைப்பினும் இந்த குழந்தையின் தாய்க்கு சரியான கர்ப்பகாலத்தில் சரியான ஊட்டச்சத்து கொடுக்காததால் இம்மாதிரியான குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply