shadow

கொரோனா விதிமுறைகளை மீறி திருமணம் நடந்ததால் மணமகன் மணமகள் உள்பட திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் உறவினர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேற்கு திரிபுராவில் நேற்று ஒரு திருமணம் நடந்தது அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை மீறி இரவு நேரத்தில் திருமணம் குறித்த சடங்குகள் நடைபெற்றன இதில் மணமகன் மணமகள் உள்பட ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டனர்

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை திருமண வீட்டார் மீது வழக்கு பதிவு செய்தனர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மணமகன் மணமகள் உள்பட அந்த திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply