தமிழகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து உள்ளது
நேற்று சுமார் 3000 பேர்கள் மட்டுமே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் சென்னையில் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள்தான் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் திடீரென தமிழகத்தில் மிக வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் இதுவரை 1785 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது தமிழக மக்களிடையே மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.