shadow

தமிழக அரசின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு தொழில் அதிபர்கள் திரை உலக பிரபலங்கள் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஹட்சன் நிறுவனத்தின் அதிபர் ரூபாய் மூன்று கோடி நிதி உதவி செய்துள்ளார்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஹட்சன் குழுமத்தின் தலைவர் ஜிஆர் சந்திரமோகன் அவர்கள் முதல் அமைச்சரை நேரில் சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ3 கோடிக்கான காசோலையை வழங்கினார்