அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது சென்னையில் மட்டும் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பரவி வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

மேலும் கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்

இந்த நிலையில் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை சிறையில் ஆயுள் கைதியாக இருக்கும் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது இதனை அடுத்து அவர் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பாளையங்கோட்டை ஆயுள் கைதி ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது மற்ற சிறை கைதிகள் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply