shadow

கொரனோ தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களும் ஒரு சிலர் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

இந்த நிலையில் கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து மருத்துவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்

ஆனால் அதே நேரத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு ரூபாய் ஒரு கோடி வழங்க வேண்டும் என அப்போதைய முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.