முதல்வர் அறிவிப்பு
ஆந்திராவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் மரணம் அடைந்தால் இறுதிச்சடங்கு செய்யக்கூட பணம் இல்லாமல் பலர் தவித்து வருவதாக வெளிவந்த செய்தியை அடுத்தே முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.