shadow

டாடா நிறுவன ஊழியர்கள் கொரோனாவால் காரணமாக உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என டாடா நிறுவனம் அறிவித்துள்ளது
கொரோனாவால் உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்துக்கு அவர்களுடைய பணி நிறைவு காலம் வரை முழு சம்பளம் வழங்கப்படும் என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது

அதுமட்டுமின்றி இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஊழியரின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவையும் டாடா நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என்றும் அந்த குழந்தைகள் பட்டப்படிப்பு வரை ஆகும் செலவு முழுவதையும் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது