கொடநாடு விவகாரம்: அதிமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி


கோடநாடு கொலை, கொள்ளை பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச தடைவிதிக்கக் கோரி அதிமுக தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான புகார் குறித்து விசாரிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியதால் மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக கோடநாடு விவகாரத்தில் முதல்வர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேச தடைகோரி அதிமுக செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply