‘கை’க்கு ஓட்டு போட்டால் ‘தாமரை’க்கு விழுகிறதா? தேர்தல் அதிகாரி மறுப்பு

கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள ஒருசில வாக்குச்சாவடிகளில் ‘கை’ சின்னத்திற்கு வாக்கு போட்டால் ‘தாமரை’ சின்னத்திற்க் விழுவதாக கேரள காங்கிரஸார் குற்றஞ்சாட்டினர்.

இந்த நிலையில் கோவளத்தில் 151 வாக்குச்சாவடிகளில் எந்த சின்னத்துக்கு வாக்களித்தாலும் தாமரையில் ஓட்டு பதிவாவதாக கூறிய காங்கிரஸின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என கேரள தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

எந்த சின்னத்திற்கு ஓட்டு போடோம் என்ற விபரம் தெரியும் வசதி இந்த தேர்தலில் இருப்பதால் சின்னம் மாறி ஓட்டுக்கள் பதிவாக வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது

Leave a Reply