shadow

கே.வி.ஆனந்த்-விஜய்சேதுபதி படத்தின் நாயகி அறிவிப்பு
manjima mohan
கோ, அயன், மாற்றான், அனேகன் உள்பட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் டி.ராஜேந்தர் நடிக்கவுள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. ஏஜிஎஸ். நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் நாயகி தேர்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக மஞ்சிமா மோகன் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

மலையாள நடிகையான மஞ்சிமா மோகன் தற்போது சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இவர்தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, மஞ்சிமா மோகன், டி.ராஜேந்தர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு எழுத்தாளர்கள் சுபா வசனம் எழுதுகின்றனர். கபிலன் வைரமுத்து இந்த படத்தின் பாடல்களை எழுதுகிறார். அதிரடி ஆக்ஷன் கதையாக இந்த படம் அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply