கேரளா அணையில் மூழ்கி இரண்டு தமிழக இளைஞர்கள் பலி

கேரளாவில் உள்ள பாலக்காடு அருகே மலம்புழா அணையில் மூழ்கி தமிழகத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலக்காடு அருகே மலம்புழா அணையில் தமிழகத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் குளித்தபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர். உயிரிழந்த 2 இளைஞர்களின் உடல்களும் பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது

Leave a Reply