கேரளாவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதை அடுத்து அங்கு மார்ச் 17 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பொது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது அடிப்படையில் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 8 முதல் 30-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் விரைவில் புதிய அட்டவணை வெளியாகும் என்றும் கேரள மாநில பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது
பொதுத்தேர்வில் பணிபுரியும் ஆசிரியர்கள் தற்போது தேர்தல் பணிக்கு சென்று கொண்டிருப்பதால் தேர்வுகள் தேதி மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply