நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் தூண்டுதலினால் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட அனைவருமே பாலாஜியை எதிர்க்க பாலாஜி ஒற்றை ஆளாக அனைவரையும் சமாளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாலாஜி தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை எழுப்பி வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய செய்யுங்கள் என அர்ச்சனா வேல்முருகனை தூண்டிவிட்டார்

வேல்முருகன் வேறு வழியில்லாமல் பாலாஜியை எழுப்ப, தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுப்பாதீர்கள் பின்னர் செய்கிறேன் என்று பாலாஜி கூறினார்

அதன் பின்னர் மீண்டும் அர்ச்சனா உசுப்பேற்ற பிரச்சனை பெரிதானது. அதன்பின்னர் வெகுண்டெழுந்த பாலாஜி, அர்ச்சனா உள்பட அனைவரையும் வெளுத்துக் கட்டினார் துணிச்சலுடன் ஒற்றை ஆளாக தன்னை எதிர்க்கும் அர்ச்சனா, ரியோ ஆகியோர்களை வெளுத்து வாங்கியது சுவாரஸ்யமாக இருந்தது

Leave a Reply