கூகுள் சுந்தர்பிச்சைக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

உலகின் மிகப்பெரிய விருதுக்கு கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக அளவிலான தலைமைப் பதவிக்கான விருதுக்கு சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதுக்கு சுந்தர் பிச்சை, அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கின் தலைவர் அடினா ஃப்ரைட் மேன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில், சுந்தர் பிச்சை மற்றும் அடினா ப்ரைட் மேன் ஆகிய இருவரையும் 2019 ஆண்டுக்கான உலகளாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

இந்த விருது விரைவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply