குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் பெற்றோர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம்: முதல்வர் அறிவிப்பு

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு வருடம் ஒன்றுக்கு 15 ஆயிரம் வழங்ப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

தாய்மடி திட்டம் என பொருள்படும் வகையில் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு 6456 கோடி ரூபாயை ஆந்திரா அரசு ஒதுக்கியுள்ளதாகவும் இந்த திட்டம் மூலம் சுமார் 82 லட்சம் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பயன் பெறுவார்கள் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எவ்வித இடையூறும் இன்றி கல்வி கற்க வசதியாக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தாய் மடி திட்டத்தில் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த திட்டத்தின்படி குழந்தைகளின் தாயின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படும் என்றும் வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த புதிய திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், மாணவ மாணவிகள் மட்டுமின்றி அவர்களது பெற்றோரும் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்றும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது

Leave a Reply