குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்தவர் அதிரடி கைது
குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் கைது நடவடிக்கைகள் தொடங்கி ஏற்கனவே மூன்று பேர் கைடு செய்யப்பட்டுள்ள நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்த்த சிவராஜ் என்பவர் திடீரென தலைமறைவானார். இவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தேடி வந்த நிலையில் சற்றுமுன் அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்
தலைமறைவாக இருந்தவரை செல்போன் சிக்னல் மூலம் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அதிரடியாக சிபிசிஐடி போலீசார் பிடித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.