shadow

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழக அரசின் தேர்வுத்துறையின் குரூப் 4 தேர்வுக்கான கடைசி தேதி ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் குமரி மாவட்ட மக்கள் ஓகி புயலால் பாதிக்கப்பட்டிருந்ததால், அம்மாவட்டத்தை சேர்ந்தவர்களால் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணபிக்க முடியவில்லை என்றும் இதனை கருதி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதியை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதன்படி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க தற்போது டிசம்பர் 20 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 21ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட குமரி உள்ளிட்ட மாவட்ட விண்ணப்பதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply