கும்பிடு போட்டு பதவி வாங்கவில்ல: சட்டசபையில் செந்தில் பாலாஜியின் பேச்சால் பரபரப்பு

இன்று சட்டசபையில் பேசிய திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, தான் கும்பிடு போட்டு திமுகவில் பதவி பெறவில்லை என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக, அமமுக , திமுக என குறுகிய காலத்தில் மூன்று கட்சிகளில் இருந்த செந்தில்பாலாஜி சமீபத்தில் நடந்த தேர்தலில் அரவக்குறிச்சியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இன்று அவர் சட்டசபையில் பேசியபோது தான் யாருக்கும் கும்பிடு போட்டு பதவியை பெறவில்லை என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பேச அதற்கு விளக்கம் அளித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதால் இன்று சட்டமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply