shadow

கும்பகோணம் மாதுளம் பேட்டை தெருவில் வசிப்பவர் வினோத் குமார். இவர் மீது கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது .

இந்நிலையில் இன்று காலை வினோத்குமார் கும்பகோணம் ரயில் நிலையம் அருகில் பகதூர் சாஸ்திரி சாலையில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வினோத்குமாரை கண்மூடித்தனமாக அறிவாளால் வெட்டி உள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த வினோத்குமார் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக வினோத்குமாரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி அவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். பிரபல ரவுடியை அறிவாலால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.