குண்டுவெடிப்புக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம்: இலங்கை அரசு அறிவிப்பு
இலங்கையில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
மேலும் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்திய அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஆக உயர்ந்த்ள்ளது. மேலும் இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இன்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவசர நிலையும் அறிவித்தார் அதிபர் சிறிசேன
Leave a Reply
You must be logged in to post a comment.