சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான வாட்சனின் குடும்ப உறுப்பினர் ஒருவர் மரணம் அடைந்த நிலையிலும் அவர் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பங்கேற்றுள்ள செய்து தற்போது கிடைத்துள்ளது

நேற்று முன்தினம் டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்றது அதில் பங்கேற்று 14 ரன்களில் வாட்சன் அவுட்டானார்

இந்த நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய மிகவும் பாசத்துக்குரிய பாட்டி அவர்கள் இறந்து விட்டதாகவும் இருந்தாலும் அந்த சோகத்தை மனதில் வைத்துக்கொண்டே அணிக்காக விளையாட வேண்டும் என்பதற்காக களத்தில் இறங்கினேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எனது அணியின் வெற்றி தான் தற்போதைக்கு முக்கியம் என்றும் அதனால் என் குடும்பத்தினரை இப்போதைக்கு சந்திக்க நான் செல்லவில்லை என்றும் ஆறுதலாக இந்த ட்வீட்டை மட்டும் பதிவு செய்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வாட்சனின் செய்த அர்ப்பணிப்பு செய்கை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply