குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம்: பிரபல நடிகை அளித்த புகார்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் செய்து வருகின்றனர். மேலும் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் இந்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து தங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

இந்த நிலையில் சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்த சின்னத்திரை நடிகை ஜெயலஷ்மி அவர்கள் சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்

இந்த புகாரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply