குடியரசுத் தலைவர் விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 9ஆம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்லவுள்ள நிலையில் அவர் செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்ல அந்நாட்டு அனுமதி தர மறுத்துள்ளதாக செய்திகள் வெளிவ்ந்துள்ளது

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் செல்லும் விமானத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அனுமதி கேட்ட நிலையில் பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி உறுதி செய்துள்ளார்.

காஷ்மீரில் 370வது சிறப்புப்பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்தே இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply