shadow

குடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்

மத்திய பிரதேச மாநிலத்தில் டாமோ என்ற ஸ்லம் பகுதியில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஐந்து குழந்தைகளும் அவர்களுடைய பெற்றோர்களும் இந்த தீவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததாகவும், அனைவரும் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இப்போதைக்கு அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது இந்த தீவிபத்து நடந்ததாகவும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply