shadow

குடகு விடுதியில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் திடீர் வெளியேற்றம்

கடந்த சில வாரங்களாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு விடுதியில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இவர்களில் 18 எம்.எல்.ஏக்கள் சமீபத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது

இந்த நிலையில் சற்றுமுன்னர் குடகு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவாளர்கள், பெங்களூரு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்று மாலை பரோலில் சசிகலா வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவரை வரவேற்க தினகரன் ஆதரவாளர்கள் பெங்களூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply