காஷ்மீரை போலவே சென்னையும் யூனியன் பிரதேசமாக மாறும்: சீமான்
காஷ்மீரை போல தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என 2ஆக பிரிப்பார்கள் என்றும், சென்னையை புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள் என்றும் நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தால் இந்திய அரசுக்கு பல நடைமுறை சிக்கல் இருந்ததாலே மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது என்பதும், இது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றாக தெரிந்தும் வேண்டுமென்றே காஷ்மீர் போல் மற்ற மாநிலங்களும் பிரிக்கப்படலாம் என்ற வதந்தியை பரப்பி வருவதாகவும், அவர்களில் ஒருவர் தான் சீமான் என்றும் அரசியல் விமர்சகர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.