shadow

தமிழகத்தில் உள்ள காவலர்களுக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கோவிட்-19 காலத்திலும் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிடும் காவல்துறையினருக்கு அரசின் சார்பில் என் அன்பின் நன்றியும் பாராட்டுகளும்! அவர்தம் பணியினை போற்றும் வகையில் இரண்டாம்நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை ரூ.5000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.