கால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்

ஜமைக்கா நாட்டில் கால்பந்தாட்டத்தின் போது மின்னல் தாக்கியதால் இரண்டு வீரர்கள் சுருண்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜமைக்கா காலேஜ் அணிக்கும், வோல்மெர்ஸ் பாய்ஸ் அணிக்கும் இடையே கால்பந்தாட்டப்போட்டி ஒன்று கிங்ஸ்டன் என்ற இடத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் திடீரென மைதானத்தில் மின்னல் தாக்கியது. இதன் தாக்கத்தால் மைதானத்தில் இருந்த இரண்டு வீரர்களும் தலையைப் பிடித்துக் கொண்டு மண்டியிட்டு ஒரே நேரத்தில் தரையில் வீழ்ந்தனர்.

இதனையடுத்து உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டு இரண்டு வீரர்களும் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். அதில், ஜமைக்கா காலேஜ் அணியைச் சேர்ந்த ஒரு வீரரின் இடது பக்க உடல் பாகம் செயலிழந்து, பேச்சு வராமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு வீரரும், மின்னல் தாக்கியபோது மைதானத்தில் இருந்து நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட இன்னொரு வீரரும் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply