சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை திடீரென நான்கைந்து பேர் தள்ளி விட்டதாகவும் இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மம்தா பானர்ஜிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளன

இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் அவர் சக்கர நாற்காலியில் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தற்போது மம்தா பானர்ஜியின் உடல்நலம் தேறி வருவதாகவும் அவரது எலும்பு முறிவுக்கு ஏற்ற சிகிச்சைகள் தரப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது

Leave a Reply