shadow

‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும்’: அமைச்சர் ஜெயகுமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் வெளியாகவுள்ளது. இருப்பினும் இன்று காலை 9 மணியளவில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் பாடல்களை வெளியிட்டார். இந்த பாடல்கள் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் பாடல்கள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘காலா’ படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது. ‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும்’. எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களில் மது, புகை பிடித்தது கிடையாது. கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள பாடல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

Leave a Reply