கார்த்திக்கு குரல் கொடுத்த எஸ்பி பாலசுப்பிரமணியம்
கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் ‘தேவ்’ திரைப்படடத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ஆக்சன் திரில்லர் மற்றும் அட்வெஞ்சர் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்திற்காக நேற்று ஒரு பாடலை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் ஒலிப்பதிவு செய்தார். இந்த பாடலை பழம்பெரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடினார். இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுளார்.
இதே ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கபிலன் வைரமுத்து பாடல் வரிகளில் சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்திற்காக ‘எம்மா எம்மா’ என்ற பாடலை எஸ்பிபி பாடினார் என்பதும் சரியாக 7 வருடங்களுக்கு பின் மீண்டும் அதே குழுவில் எஸ்பிபி பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.