ஜார்ஜியா நாட்டில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் தனது காரில் வைத்திருந்த ஆவணங்களை ஒரு ஆடு சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து அந்த அதிகாரி தனது பேஸ்புக்கில் கூறியபோது, ‘ஒரு சிவில் வழக்கு தொடர்பாக விசாரணை செய்யவேண்டிய ஆவணங்களுடன் ஒரு குடியிருப்புக்கு சென்றதாகவும், விசாரணை முடிந்து திரும்பி வந்தபோது ஒரு ஆடு தனது காரில் நுழைந்து முக்கியமான ஆவணங்களையும் சாப்பிடுட்டு விட்டதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.
தனது வாகனத்தின் கதவைத் திறந்து வைத்து இருந்ததாகவும், இதனால் அந்த ஆடு ஆவணங்களை தின்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதி தின்ற ஆவணங்களை சக போலீசார்கள் அந்த ஆட்டிடம் இருந்து மீட்டெடுக்க முயற்சித்ததாகவும், ஆனால் கடைசி வரை முடியவில்லை என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.