காயத்ரி ரகுராம் வீட்டின் முன் திடீரென குவிந்த போலீஸ்: பெரும் பரபரப்பு

இந்து கோவில் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த நிலையில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காயத்ரி ரகுராம் ஒரு டுவீட்டை பதிவு செய்து பின்னர் எதிர்ப்பு வந்தபின்னர் அந்த டுவீட்டை நீக்கியதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் திருமாவளவனுக்கு எதிராக அவதூறாக டுவிட்டரில் பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காயத்ரி ரகுராமைக் கண்டித்து சென்னை மகாலிங்கபுரத்தில் இருக்கும் காயத்ரி ரகுராம்மின் வீட்டின் முன்பு பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஒருசிலர் காயத்ரி வீட்டிற்குள் நுழைய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக காயத்ரி வீட்டிற்கு வந்து போராட்டக்காரர்களை கலைத்ததாகவும், இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply