காமராஜர் பல்கலை பெண் பேராசிரியருக்கு கத்திக்குத்து: தற்காலிக பணியாளரின் வெறிச்செயல்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பெண் பேராசிரியர் ஜெனிஃபா என்பவரை தற்காலிக பணியாளர் ஒருவர் கத்தியால் குத்தியதால் பல்கலைக்கழக வளாகமே பரபரப்பில் உள்ளது.
தற்காலிக பணியாளர் ஒருவர் மீது பேராசிரியர் ஜெனிஃபா நடவடிக்கை எடுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர் கத்தியால் குத்தியதாகவும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் மதுரையில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆனால் இந்த சம்பவத்தை ஒருசிலர் மதப்பிரச்சனையாக ஆக்கி வருவதாகவும், இந்த சம்பவத்தின் உண்மை பிரச்சனையை கண்டறிய வேண்டும் என்றும் சமூகவலைத்தளங்களில் பரபரப்பான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.